கன்னத்தில் என்னடி காயம்

கன்னத்தில் என்னடி காயம் என்று
அன்னையவள் கேட்க அவள் சொன்னாள்
' அம்மா , தோட்டத்தில் ரோசா பறிக்க
அதன் முள் கொஞ்சம் கீறிவிட்டது'
பாவம் தாய் அறியாள் தோட்டத்தில்
அவள் கன்னத்தை பதம் பார்த்தது
அவன் அவளுக்கு அளித்த அந்த
காதல் முதல் முத்தம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-21, 8:46 pm)
பார்வை : 138

மேலே