இறைவன்

நீந்தி நீந்தி ஆழ்கடலில் கரைத்தெறியது
தவித்தான் அவன் தூரத்தில் ஒரு
ஓடம் மிதந்துவர கண்டான் கரை
சேர்ந்துவிட அவன் மனதில் நம்பிக்கை ....
ஆனால் அந்தோ அவன் அப்போது
கொஞ்சம் அருகே ஒரு சிறுதீவும் கண்டான்
அதில் அழகி ஒருத்தி இவனைப் பார்ப்பதுபோல்
அவன் கவனம் இப்போது ஓடத்தை விட்டுவிட்டது
அவள்மேல் பதிந்தது..... இதோ வேகமாய்
நீந்தி போகும் அவன்..... அந்த அழகியை நாடி
அவனறியான்.... அந்த ஓடத்தில் அவனுக்கு
அடைக்கலம் தர காத்திருந்தான் இறைவன் என்று
காமம் மனிதன் கண்களின் பார்வையைக்கூட
மாற்றிவிடும் இப்படித்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-21, 9:02 pm)
Tanglish : iraivan
பார்வை : 73

மேலே