சீரழியக்கூடாது
மங்கள நாணேறும்
மண நாளைக் காண
மங்கையவள் காத்திருக்க
சீர்கெட்ட மனிதனோ
சீர் வரிசை கேட்டு
சீரழிக்கும் பெண்களை
சாதி, மதங்கள் தடுத்து
சரி செய்ய முடியாதா ?—இல்லை
சமுதாயம் தான் கேட்காதா?
காலம்,காலமாய்
கறை படிந்த மணமுறைகள்
கடந்து போகாத வரை
மங்கையரின் மண வாழ்க்கை
மரியாதை பெறாமலேயே
மரணத்தைத் தேடாதோ!
சட்டம் ஏற்ற வேண்டும்
சீர் வரிசையால்
சமூகம் சீரழியக் கூடாது.