தினம்நீ இருந்தால் திருப்பமுண்டு
ஊடல் கொண்ட பெண்ணே
தேடல்பல கொண்ட யென்கண்ணே
ஊடல்யெல்லாம் உதட்டில்தானடி
உள்ளபடி யென்உள்ளத்தில் நீதான் தேனடி.
புரியாதவர் தெளிவதில்லை
அறியாதவர் அருகில்லை யென்பதால்
ஆணவம் இல்லை ...வெட்டிகெளரவம் வேண்டாம் தாம்பத்தியத்தில்
பொறுத்துப் போவாரே வலியார்
வெறுத்துப்போவார் எல்லாம் எலியார்
மனம் மணமானால் மணவாளன்நானும்
குணம் மாறுவேனடி யென்குயிலே
மனமிருந்தால் மார்க்கமுண்டு
தினம்நீ யிருந்தால் திருப்பமுண்டு
குற்றம் யார்புரினும் சட்டென
மறப்பதே மானுடம்.