வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சியே!
உன இறக்கைகள் தூரிகையின்.வர்ணஜாலமா?
மெல்லிய இறக்கைகளால்
விழிகளுக்கு விருந்தானவளே!
தீண்ட நினைக்கையில்
எட்டி நீ செல்கிறாயே!
மலர் தோறும் மதுவெடுத்து
மகரந்தத்தை சேர்க்கிறாயே!
மலர்களும் கருவுறுகிறதே
காய்கனிகளும் உருவாகிறதே
வண்ணத்துப்பூச்சியே
நீயும் இயற்கையின் தாய்தானோ?
ஜோதி மோகன்
புதூர்