கொரோனாவை முறியடிப்போம்

அரசாங்கம் வகுக்கும் கட்டுப் பாடுகளுக்கு
ஒருமொத்தமாய் அடிபணிந்து வாழத் தொடங்கினால்
'ஒழுக்கம் விழுப்பம் தரலாம்' என்ற
குறள் வேத மொழிக்கேற்ப இந்த
கொடூர கொரானாவின் தாக்கத்திலிருந்து
மீண்டு மீண்டும் வாழாத தொடங்கலாம்
இதை விட்டு நமிட்டபடி வாழ நினைத்தால்
கொரோனா நம்மனித இனத்தையே அழித்திட
மீண்டும் மீண்டும் படை எடுத்திடலாம்
இந்த கஜினியின் கொடிய தாக்குதலை
நம் ஒழுக்க கட்டுப் பாட்டால் முறியடிப்போம்
அரசாங்கம் நமக்கென்றால் நாம் அரசாங்கத்திற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-May-21, 7:03 pm)
பார்வை : 71

மேலே