உடலும் உலகும் - தரவு கொச்சகக் கலிப்பா

பிரிந்திசைத் துள்ளல் ஓசை உடைய
தரவு கொச்சகக் கலிப்பா

பூதங்கள் ஐந்தோடும் எவ்வுடலும் முரண்பட்டால்
பூதங்கள் ஐந்தினிலே எப்பூதம் விலகிவிட்டால்
பூதங்காத்த உடலையினி அழைப்பார்கள் பிணமென்றே
செழித்திட்ட விரிமலர்கள் வதங்கிவிழும் நிலைபோன்றே.
-----நன்னாடன்

கலித்தளையும், வெண்சீர் வெண்டளையும் உள்ளன.
முடிந்தவரை வார்த்தைகள் பிரிக்கப்படாமல் ஆனால் முழுவதும் இலக்கண விதிகளுக்கு கட்டுப்பட்டு புனையப்பட்ட மரபுக்கவிதை.
(நன்னாடன் என்னும் நான் சில மரபு வழிக் கவிதைகளை இலக்கண மரபுடன் எழுதி இரண்டு அல்லது அதற்கு மேலாக எழுதி இந்த தளத்தில் பதிவிடுவோம், நான் குறிப்பிடும் பா என்பது குறிப்பிடப்படும் இலக்கண மரபுக்குட்பட்ட சீர் மற்றும் அடிகளுக்கு உட்பட்டதே ஆகும்)

எழுதியவர் : நன்னாடன் (16-May-21, 12:09 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே