நேர்ப்படுத்தி வாழ்ந்து நெஞ்சம் நிமிர்தல் நல்கும் இன்பமே - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 விளம்)

ஊர்ந லன்றான் உன்ன தமென
..உள்ளந் தனிலே சொல்லிட
சீர்கெட் டுவாழ்த லின்சிந் தனையில்
..செம்மாந் திருப்பேன் சீர்மையாய்!
ஏர்மு னைக்கு நேரிங் கேயெ
..துவுமே யில்லை அறிந்துகொள்;
நேர்ப்ப டுத்தி வாழ்ந்து நெஞ்சம்
..நிமிர்தல் நல்கும் இன்பமே! - வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 விளம்)

எந்த வெந்த யோனி பேத மெங்கு மெங்கு முள்ளன
அந்த வந்த யோனி தோறு மாவி யான தன்மையைச்
சிந்தை யின்க ணொருக ணத்தி னிகழு மாறு தேவர்கோன்
மைந்த னுய்ந்தி டப்பு கன்ற வள்ள றாள்வ ணங்குவாம். 1

- கடவுள் வாழ்த்து, இரண்டாம் போர்ச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-21, 10:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே