நீயே சொல் பெண்ணே!

💖💖💖💖💖💖💖💖💖💖💖

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💖💖💖💖💖💖💖💖💖💖💖

❤️பெண்ணே!
நான்
ஓவியனாக பிறந்திருந்தால்
உன்னை
சித்திரமாக வரைந்திருப்பேன்...

🧡நான்
சிற்பியாக பிறந்திருந்தால்
உன்னை
சிலையாக வடித்திருப்பேன்...

💛நான்
பணக்காரனாகப்
பிறந்திருந்தால்
உனக்கு
ஆலயம் கட்டியிருப்பேன்...

💚நான்
கவிஞனாய் பிறந்திருந்தால்
உன்னைக்
கவிதையாக எழுதியிருப்பேன்...

💙நான்
பாடகனாகப் பிறந்திருந்தால்
உன்னை
பாடலாகப் பாடியிருப்பேன்

🤎ஆனால்
நானோ!
சராசரி மனிதனாக
பிறந்து விட்டேனே...!
உன்னை
உயிருக்குயிராய்
நேசிப்பதைத் தவிர
நான்
வேறென்ன செய்ய முடியும்?

*கவிதை ரசிகன்*

💖💖💖💖💖💖💖💖💖💖💖

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-May-21, 6:25 pm)
பார்வை : 64

மேலே