நீயே சொல் பெண்ணே!
💖💖💖💖💖💖💖💖💖💖💖
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
❤️பெண்ணே!
நான்
ஓவியனாக பிறந்திருந்தால்
உன்னை
சித்திரமாக வரைந்திருப்பேன்...
🧡நான்
சிற்பியாக பிறந்திருந்தால்
உன்னை
சிலையாக வடித்திருப்பேன்...
💛நான்
பணக்காரனாகப்
பிறந்திருந்தால்
உனக்கு
ஆலயம் கட்டியிருப்பேன்...
💚நான்
கவிஞனாய் பிறந்திருந்தால்
உன்னைக்
கவிதையாக எழுதியிருப்பேன்...
💙நான்
பாடகனாகப் பிறந்திருந்தால்
உன்னை
பாடலாகப் பாடியிருப்பேன்
🤎ஆனால்
நானோ!
சராசரி மனிதனாக
பிறந்து விட்டேனே...!
உன்னை
உயிருக்குயிராய்
நேசிப்பதைத் தவிர
நான்
வேறென்ன செய்ய முடியும்?
*கவிதை ரசிகன்*
💖💖💖💖💖💖💖💖💖💖💖