என் மனதில் உன்னை குடிவச்சேன் 555

***என் மனதில் உன்னை குடிவச்சேன் 555 ***


ப்ரியமானவளே...


கத்தரி வெயில் போயாச்சு
வைகாசி பொறந்தாச்சி...

அத்தி மலர் மலர்ந்தாச்சி
அத்தை மகளும் பிறந்தாச்சு...

உன்னை
நினைச்சி வாழை வச்சேன்...

என் மனதில்
உன்னை குடிவச்சேன்...

வாழைமரம் பூத்துடுச்சி
அத்தை மகள் நீ பூப்பெய்தாச்சு...

இத்தனை ஆண்டுகள்
செல்ல சண்டைகள் போதும்...

நான் உன் மன்னவனாகவும்
நீ என் மங்கையாகவும்...

தினம் காணவேண்டும்
தேன் நிலவில் இன்பம்...

நாம் மணந்து கொள்ளும் நாளொன்று
சேதி சொல்லடி இன்று...

வாழை
இலையும் வளர்ந்திருக்கு...

நம்மை வாழ்த்தும்
உறவுகளுக்கு பந்தியிட...

அத்தை மகள் உனக்கு மெட்டியிட்டு
முத்தமிட காத்திருக்கிறேன்...

எனக்காக நீயும்
பூத்திருக்கிறாய் என் ப்ரியமானவளே.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-May-21, 5:22 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1184

மேலே