கிருமியின் தாண்டவம்

கிருமியின் தாண்டவம்

மாதங்கள் உருண்டோடி விட்டன
காட்சிகள் மடிந்து மாய்ந்து விட்டன
கொண்ட கோலங்கள் மாறி விட்டன
காணும் வேடங்கள் புதிதாகி விட்டன
விதி முறைகள் வேறாகி விட்டன
உணர்வுகள் யாவும் ஒடுங்கி விட்டன
முகமறியா கிருமி ஒன்று மெல்ல புகுந்து
முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி
உலகை முடக்கி நம்மை உறையவைத்தது
இந்நிலை மாறி சுக வாழ்வு மீண்டும் மலர
இறையருள் வேண்டி வரும் நாளை கழிப்போம்

எழுதியவர் : கே என் ராம் (26-May-21, 12:57 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 31

மேலே