தென்றல்சேர் சீமாட்டியே - கலித்துறை

கலித்துறை
(மாங்காய் 4 மாங்கனி)

தீப்போன்ற உன்கோபம் தீர்ந்தென்மேல் தென்றல்சேர் சீமாட்டியே!
காப்பென்ற என்சொல்லில் காமன்றான் வந்தோர்ந்து காப்பாகிடப்
பூப்போன்ற உன்வாயில் பொன்னன்ன நன்முத்தாய்ப் பூத்தானதும்
காப்பாற்ற நீவந்து கண்நோக்குந் தான்காட்டிக் காத்தாலுமென்?

- வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:
கலித்துறை
(மாங்காய் 4 மாங்கனி)

அண்ணற்ற ருப்பெற்ற பின்னந்த வயமீளி யக்காவினில்
தண்ணித்தி லப்பொய்கை படிவுற்றின் னமுதன்ன தண்ணீர்குடித்(து)
எண்ணற்ற கழுதாட லதுகண்டி ருந்தங்கி ளைப்பாறினான்
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கு முறவான வடிவாளினான். 125

- முண்டகச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-21, 1:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே