தென்றல்சேர் சீமாட்டியே - கலித்துறை
கலித்துறை
(மாங்காய் 4 மாங்கனி)
தீப்போன்ற உன்கோபம் தீர்ந்தென்மேல் தென்றல்சேர் சீமாட்டியே!
காப்பென்ற என்சொல்லில் காமன்றான் வந்தோர்ந்து காப்பாகிடப்
பூப்போன்ற உன்வாயில் பொன்னன்ன நன்முத்தாய்ப் பூத்தானதும்
காப்பாற்ற நீவந்து கண்நோக்குந் தான்காட்டிக் காத்தாலுமென்?
- வ.க.கன்னியப்பன்
எ.காட்டு:
கலித்துறை
(மாங்காய் 4 மாங்கனி)
அண்ணற்ற ருப்பெற்ற பின்னந்த வயமீளி யக்காவினில்
தண்ணித்தி லப்பொய்கை படிவுற்றின் னமுதன்ன தண்ணீர்குடித்(து)
எண்ணற்ற கழுதாட லதுகண்டி ருந்தங்கி ளைப்பாறினான்
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கு முறவான வடிவாளினான். 125
- முண்டகச் சருக்கம், வில்லி பாரதம்