கள்ளச் சிரிப்பழகிகுழந்தை செல்வம்
* மழை என்ன?
வெயில் என்ன?-உன்
முத்து சிரிப்பினிலே
* பனி என்ன?
குளிர் என்ன?-உன்
கோணல் சிணுங்களிலே
* பசி என்ன?
பிணி என்ன?-உன்
காந்தப் பார்வையிலே
*வலி என்ன?
வறுமை என்ன?-நீ
மடியில் தவழ்கையிலே
*காலை என்ன?
மாலை என்ன?-உன்
பொற்பாதம் மார்பில் உதைக்கயிலே
* ஜென்மம் வேண்டும்-பல
ஜென்மம் வேண்டும்
உன்னை ரசித்திடவே
S.Jayasri