நீ எனக்கு

நீ எனக்கு...

என் இனிய கண்ணம்மா..!
நீ பேசாத நாட்களை நான் ஒருபோதும்
கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை...
விரல்விட்டு எண்ணுகிற அளவையா..?
நாம் கொண்ட காதல் அந்த,
வினையன் ஈசன் கொடுத்த காதலல்லவா..!
இருப்பினும், அந்த நாட்களெல்லாம்
எனக்கு அமாவாசை தான்...
எத்தனையெத்தனை பொழுது
எனைத் தின்றிருக்கும் அந்த பேயிரவு...
என் சிந்தையெல்லாம் சங்கமித்தவளே..!
உன் பேச்சும் மூச்சும் தானே
என் இதயத்தின் பௌர்ணமி...
என் இனிய அன்புச்செழினியே..!
உன் முகம் காணும் நாளெல்லாம்
முழுநிலவு நீ எனக்கு...!!

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (30-May-21, 7:39 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : nee enakku
பார்வை : 378

மேலே