காதல் கவிதை வரைந்தேன் உனக்கு3

நீ கொஞ்சம் கருப்பு நிறம்
என்பதை பிறர்ச்சொல்லித்தான்
நானறிந்தேன்
உண்மையான காதலுக்கு
பேதங்களும் நிபந்தனைகளும்
இருப்பதேயில்லை...

அன்பே....
உனக்குப் புரிந்ததைவிட
உன் அண்ணன் மகளுக்கு நம் காதலை நன்கு புரிந்திருக்கிறது
உன்னை அத்தை என்றழைக்கிறாள்
எனை யாரென்று தெரியாமலேயே
மாமா என்றழைக்கிறாள்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jun-21, 8:51 am)
பார்வை : 81

மேலே