ஆலயச் சிலைபோல் அசைந்து நடந்து வரும் தேவியை

மலரே மல்லிகை மலரே
மலரும் போதே மணம் வீசும்
வெண்ணிறப் பூவே
சிலைபோல் நடந்து வரும்
புன்னகைப்பூ அவளின் கூந்தலில்
மௌனமாய்ச் சிரிக்கும் வெண்பூவே
அழகுக்கு அழகு செய்ய வந்தாயோ ?
பழகுதமிழ் பார்த்து ரசித்து
அழகினை ஆலயச் சிலைபோல்
அசைந்து நடந்து வரும் தேவியை
என்னையும் கைகூப்பி வணங்கச் சொல்லுது !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-21, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே