நிலவு வீதியில் பாய்விரி……

நிலவு வீதியில்
பாய்விரி……!


ஊர்சுற்று ..
அது
ஊதாரித்தனமல்ல
அனுபவத்தேடல்….

குட்டையை பார்
குளத்தில் குதி.

கிணற்றில் நீந்து ..
ஆற்றுநீரில்
எதிர்நீச்சல செய்…

வீட்டின்
கூரை ஏறி
கோழி பிடி…1

தும்பியின்
வால் பிடி ,
தும்பைப்பூவின்
அழகை ரசி…!

குயிலுக்கு
எதிர்குரல் கொடு…!

தம்பியிடம்
வம்பிழு…

தங்கையிடம்
அடம்பிடி….

அப்பாவிடம்
நடி….

அம்மாவிடம்
குழைந்து பேசு…

புத்தகம் பிரி
புரிந்ததை படி…

தெரியாதவற்றில்
கேள்வியால்
துளைத்தெடு ..

அடிக்கடி
கண்ணாடியில்
முகம்பார் ..

மயிரைகோதி விடு

உதடுமூடி
சிரித்துப்பழகு….

கால்நடையாய்
நடந்துபழகு ..

நிலவு வீதியில்
பாய்விரித்து
படுத்துறங்கு…

கண்கண்ட
நல்லதெல்லாம்
கண்ணுக்குள் காட்சிபடுத்து…

எனது நினைவில்
ஆவனப்படுத்திய
உனது உலகம்….
அழகானது…

வாழ்ந்துபார்…..!

எழுதியவர் : இரா.ரமேஷ் (9-Jun-21, 10:31 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 49

மேலே