தென்னம்பூப்போல் சிரிக்கும் காதல்கண்ணம்மா

யாப்பரும்கலம் காரிகை
-------என்றான் அமிர்தசாகரன்
நாப்பழகும் தமிழ்ச் சொல்லில்
--------காரிகையை வைத்தால்
பூப்பது எல்லாம்
----புதுப் புது கவிதையடி
தோப்பில் தென்னம்பூப்போல் சிரித்து
-----பார்க்கும் காதல் கண்ணம்மா !

யாப்பரும்கலம் காரிகை என்றான் அமிர்தசாகரன்
நாப்பழகும் தமிழ்ச்சொல்லில் காரிகையை வைத்தால்
பூப்பது எல்லாம் புதுப்புது கவிதையடி
தோப்பில் தென்னம்பூப் போல்சிரிக்கும்கா தல்கண்ணம்மா !

யாப்பரும்க லம்காரி கைஎன்றான் சாகரன்
நாப்பழ கும்தமிழ்ச்சொல் லில்காரி கையைவை
பூப்பதெல்லாம் புத்தம் புதுக்கவி தையடி
தோப்பில் சிரிப்பவ ளே
---இன்னிசை வெண்பா
----வேறு யாப்புவடிவும் இன்னொரு பதிவில் சொல்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jun-21, 11:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே