வீணாய் செத்தோமே

கலித்துறை,

வெள்ளை யருள்ளத்தில் வெண்மையு மில்லைவி சாலமுந்தான்
கொள்ளை பலகண்ட மொத்தமண் தன்னுட தென்றிணைத்தார்
அள்ளி யெடுத்துச்சென் றார்வைர தங்கத்தின் ஆபரணம்
கொள்ளை யனைநம்பி போகவன் பாதைசெல் லும்நரகே

நேரிசை வெண்பா


இந்திய மக்களை இத்தாலி கொண்டுபோய்
விந்தைபோர் செய்யவிட செத்தோமே -- விந்தைதானே
ஜப்பானில் ஜெர்மனி ஆப்ரிக்கா போரில்நாம்
தப்பிடாசெத் தோமேன் பகரு

வெள்ளையன் அவன் விரோதி நாட்டினருடன் முதலாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போருக்கெல்லாம் இத்தியருக்கு வெள்ளையன்
சிப்பாய் உடை மாட்டிப்பல நாடுகளிலும் போரில் உள்ளேதள்ளி
தேவையில்லாமல் சாகடித்தான். உலகின் மக்களிடம் எந்த விரோதமும்
இல்லாமல் சண்டையிட அழைத்துச் சென்று சாகடித்தான். அவனை யாரும்
இன்றுவரை அதற்காக கண்டிக்க வில்லை. மாறாய் அன்றைய விடுதலைப்
புலிகலெல்லாம் உடன்பட்ட உடந்தைகள் தான். மழுப்பல் வாதிகள்.

எழுதியவர் : பழனி ராஜன் (9-Jun-21, 2:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே