கோபுர வண்ணச் சிலையே

இளவேனிலில் இளந்தென்றலில்
இளநகைபுரிந் தசைந்துநீவரும்
நடைஅழகினில் விடைபெற்றிடும்
மேலைக்கதி ரவன்தயங்கியே
விடைபெற்றிடா மல்நிற்கிறான்
அழகே
குறுநகை எழில்கோ புரவண்ணச் சிலையே
மறைந்துகொள் கதிரவன்வா னில்விடை பெறட்டுமே !

-----குறளடி வஞ்சிப்பா
இரண்டிரண்டு சீர்களால் அமைவது குறளடி

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jun-21, 5:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே