கோபுர வண்ணச் சிலையே
இளவேனிலில் இளந்தென்றலில்
இளநகைபுரிந் தசைந்துநீவரும்
நடைஅழகினில் விடைபெற்றிடும்
மேலைக்கதி ரவன்தயங்கியே
விடைபெற்றிடா மல்நிற்கிறான்
அழகே
குறுநகை எழில்கோ புரவண்ணச் சிலையே
மறைந்துகொள் கதிரவன்வா னில்விடை பெறட்டுமே !
-----குறளடி வஞ்சிப்பா
இரண்டிரண்டு சீர்களால் அமைவது குறளடி