விளாம் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்
வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம் - இப்புவியில்
என்றாகி லுங்கனிமேல் இச்சைவைத்துத் தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின்

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பழம் சுவாசம், காசம், கபம், பித்தம், தாகம், இருமல் இவற்றை விலக்கும்; உடலுக்கு சுகமும் நல்ல பசியும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-21, 3:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே