மனக்கரை அலைகள்
மனிதஉறவுகள் விநோதமானவை
சிலநேரங்களில் தித்திக்கும்
சிலநேரங்களில் கசக்கும்
சிலநேரங்களில் முற்றிலும் அன்பு
சிலநேரங்களில் மிகவும் வெறுப்பு
சிலநேரங்களில் நிறங்களில் மிளிரும்
சிலநேரங்களில் கண்ணீர்த்துளிகள் சிதறும்
மனிதமனம் ஆழம் காண முடியா ஆழ்கடல்
அதன் அலைகள் வித விதமான உணர்ச்சிகள்
அவைகள் ஓய்வதில்லை உறங்குவதில்லை
வானளவு உயரும் பின் வீழும்
மனக்கரையில் முடிவில்லாமல்
மோதிக்கொண்டே இருக்கும் !