மனம்

மனமது தெளிந்த நீரோடை போல்
இருந்தால் அற்றுப்போகுமே
மனச்சலனங்களும் சங்கடங்களும்
மனமது கலங்கிய நீரோடை போல்
இருப்பின் நம்மை பற்றி விடுமே
கலக்கங்களும் கவலைகளும்
மனமதை தெளிவு செய்!
மகிழ்ச்சியது உனைச்சேரும்.

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (11-Jun-21, 8:49 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : manam
பார்வை : 203

மேலே