காவிரி நதிநீர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காவிரிநீ ராற்பொருமல் காசசுவா சஞ்சோபை
நீவுதொண்டைக் கட்டிளைப்பு நீரேற்றம் - பூவுலகின்
மன்னுதிரக் கட்டியொடு வாயுலரல் என்பவைபோம்
பின்னுடற்குக் காந்தியுமாம் பேசு
- பதார்த்த குண சிந்தாமணி
வயிற்றுப்பல், இருமல், இரைப்பு, வீக்கம், கபக்கட்டு, ஆயாசம், நீர்ப்பிடிப்பு, இரத்த குன்மம், நாவறட்சி போன்றன காவேரி நீர் உண்பதால் நீங்குமென்பர்.