காதலுக்குப் பலமொழி
காதலுக்குள்
இருக்கிறது... பல மொழி...
பிடிபட
வாயால் பேசுகிறான் ...
பிடித்துவிட்டால்
கண்ணால் பேசுகிறான்...
பீடித்து விட்டால்
கையால் பேசுகிறான் ...
பிடிபட்டவனோ
உடலால் பேசுகிறான்.
தப்பித்தவன் மட்டும்
மெளனமாகிறான்.