உவமை
ஊடலில்...
தாமரை இலைத்
தண்ணீர் போன்றும் ...
கூடலில்...
நீர் மட்டம் உயர
தாமரை இலை
உயர்வது போன்றும் ...
தேடலில்...
தண்ணீருக்குள்
தாமரை வேர்
ஊடுருவது போன்றும்....
இருப்பதே
கணவனைன்ற நீருக்கும்
மனைவியென்ற
தாமரை இலைக்கும்
உவமையாம்.