கண்ணேறு பட்டுவிடும் கன்னமதில் இடு,மை - கலி விருத்தம்

கலி விருத்தம்
(தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் புளிமா)

வெண்பட்டுச் சேலையிலே வேல்விழியாள் நகைக்க
பண்பட்ட செந்தமிழாள் பார்வையிலே கவிதை!
புண்செய்யா மென்மலர்போல் பூமணமும் உடையாள்
கண்ணேறு பட்டுவிடும் கன்னமதில் இடு,மை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-21, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே