கண்ணேறு பட்டுவிடும் கன்னமதில் இடு,மை - கலி விருத்தம்
கலி விருத்தம்
(தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் புளிமா)
வெண்பட்டுச் சேலையிலே வேல்விழியாள் நகைக்க
பண்பட்ட செந்தமிழாள் பார்வையிலே கவிதை!
புண்செய்யா மென்மலர்போல் பூமணமும் உடையாள்
கண்ணேறு பட்டுவிடும் கன்னமதில் இடு,மை!
- வ.க.கன்னியப்பன்