இலை இடை பூத்த மலர்

இலைகளுக்கிடையே
பூத்திருந்த புதுமலராய்
அவளது முகம்...

தேனெடுக்க வந்த வண்டு
மறந்து போய் ...
இவளது அதரங்களைச்
சுற்றிச் சுற்றியே வந்தது...

எப்போது ...
அது விரியுமென்று....

பாவம்
வண்டிற்குத் தெரியாது ...
அவள்
என்னைக் காதலிக்கிறேன்
என்று....சொல்லும்போது தான்
தேன் சுரக்கும் என்று ....

மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (17-Jun-21, 6:08 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 53

மேலே