கொரோன இல்லா தேசம்

கொரோன இல்லா தேசம்
இருமினால் இறப்பு உறுதி,
சளி பிடித்தல் சாவு உறுதி,
ஜுரம் அடித்தல் அழிவு உறுதி
வாசனை இல்லை என்றால்
வாழ்கை முடிவது உறுதி,
இப்படி அனைத்தும் உறுதி உறுதி
என்று நம்மை எல்லாம் புலம்பவைத்த
சதிகாரன் கண்ணுக்குத்தெரியாத
ஆயுதங்கள் இல்லா கொடூர கொலைகாரன்
மனித ஈரலையும் உயிரையும் மூச்சையும்
மட்டும் விரும்பும் கொரோன.
இந்த கொடியவனை விரட்ட ஒரேய் வழி
அரசுசொல்லும் வழியை பின்பற்றவேண்டும்
எனக்கு வாராது என்ற அலட்சியம் வேண்டாம்,
அலட்சியமாக இருந்ததால்தான் இன்று நாம்
பல உயிர்களை இழந்து தவிக்கிறோம்
இனியும் வேண்டாம்அலட்சியம்,
முகத்திற்கு முக கவசம் அணிவோம்,
சரியான இடைவெளி பின்பற்றுவோம்,
கைகளை சுத்தமாக கழுவுவோம் ,
சுகாதாரத்தை தொடர்ந்து பின்பற்றுவோம்
கொரோனவை முறியடிப்போம்
கொரோன இல்லா தேசத்தை உருவாக்குவோம் .

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Jun-21, 12:32 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 23

மேலே