சிந்து பாடுதடி மனம்

உன்னிடத்தில் என்னைத் தந்தேன்
உனக்குள்ளே உருகி நின்றேன்
சிந்து பாடுதடி மனம்
சிங்காரத் தேரினிலே ஊர்வலமாய்!!
முப்பொழுதும் உன் கானமடி_நீ
இல்லாத நொடிப்பொழுது வெறுமையடி..
நித்தமும் உன் மயக்கம்
நித்திரையில் வரும் கனாக்கள்..
பாக்கள் கொண்டு பாட்டிசைத்த
பாவையும் நீயடி!
யாவுமாய் நீயடி!
யாழிசையும் நீயடி!
சிந்து பாடுதடி மனம்
சிங்காரத் தேரினிலே ஊர்வலமாய்!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (18-Jun-21, 9:16 pm)
பார்வை : 82

மேலே