காணாமல் போன காதலி
கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே ...
காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சி தெரியலையே ???...
தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு !
தின்னா இறங்கவில்லை
திரை மூடி தூங்கவில்லை
தினமும் அவ நெனப்பு
தீயா எரிக்குதுன்னு ...
மனசெல்லாம் நெறைஞ்சவள
மறக்கத்தான் முடியலையே !
மண்ணுக்குள்ள போற வரை
மனசுக்குள்ள நிப்பாளே !
மரணமும் வந்து அவளை
மறக்கத்தான் செய்திடுமோ ???...
சேர்ந்து சாவமுன்னு
சத்தியம் தான் செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்தான்
போயிடுச்சோ ?
போனவளும் வருவாளோ
போகும் உசுரை பிடிப்பாளோ???...
பிடிக்காம போயிருந்தா
பிழை ஏதும் இல்லையடி? .
பிள்ளைக்கு பேரு வச்சு
பிறவிப்பயன் தந்திடுடி !...
பிள்ளையா இருந்துன்ன
பிரியமா பார்த்திடுவேன்
பின்னும் ஓர் பிறவிக்கொண்டு
புரியாம சேர்ந்திடுவேன் ...
இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை