பெண்முகம் கண்டப் பூக்கள்

கண்படு மென்று கவிழ்கிற பார்வை கணைதனையே
மண்பட விட்ட மலர்க்கொடி பாத மசைந்துவர
தண்ணொளி சிந்த தரையினில் திங்கள் தவழ்ந்ததென
பெண்முகம் கண்ட பெருங்குளப் பூக்கள் பிதற்றினவே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Jun-21, 2:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 97

மேலே