அவள் கண்ணின் நீரோட்டம்

குற்றாலம்தான் போக முடியலையே இந்த
ஒற்றாய்த் தொற்றும் கொரோனாவால் என்னசெய்ய
என்று நினைத்து கொஞ்சம் வெளியே வந்து
முற்றத்தில் நின்றேன் ஆஹா அதை
எப்படிச் சொல்வேன் என்னெதிரே வந்து
நின்றாள் என்னை நெஞ்சை அள்ளியவள்
எதிர் வீட்டு முற்றத்தில் அவள் ..... அவள்
விரி தாமரைக் கண்ணில் ஒரு
பளிங்கு நீரோட்டம் கண்டேன் அதில்
குற்றால ஐந்தருவியின் நீரோட்டம் கண்டேன்
நெஞ்சில் நிறைக்கும் குளிர்ச்சியும் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-21, 7:02 pm)
பார்வை : 130

மேலே