வாழ்க்கை வழி

வந்த வழி தெரிந்திருந்தும் ,
போகும் பாதை புரிந்திருந்தும் ,
போராட்டங்கள் எத்தனை...

போகும் போது எதுவும் இல்லை என்றாலும்
போதும் என தோணாததும் ஏனோ ...

பிரிவுகள் பிரிக்க இயலாது என்ற போதும்
பிரிவினை ,பிணக்குகள், பின்னி கிடப்பது ஏனோ ...

அனைத்தும் அல்லாது அடங்கி போவோம் என்பது
எல்லோருக்கும் தெரிந்திருந்தும் ஏனோ மனம் அது
ஆரவாரம் கொண்டு ஆர்பரிப்பதும் ஏனோ ...

அறியா மானிடனே , மாற்றங்கள் ஒன்றே மாறாதது என
மனம் அறிந்திருந்தும் , அகங்காரமாய் அலைவது ஏனோ ...

ஆசையாய் , அரவணைப்பாய் , ஆனந்தமாய்
அனைத்திலும் இருக்க , வாழும் வாழ்க்கை வளமாய் ,
வலிகள் இன்றி வாழும் வரை வரமாய் வந்திடும் ...

வாழு வாழ்க்கையை , வருத்தங்கள் இன்றி
வருந்தாது வாழு ... வாழ்க்கை என்றும் வாஞ்சையாய்
வைத்திடும் ...வாய்த்திடும் ...

இவன்
மகேஸ்வரன்.கோ(மகோ)
கோவை -35
+91-9843812650

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ(மகோ) (21-Jun-21, 10:00 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : vaazhkkai vazhi
பார்வை : 118

மேலே