இவள் மௌனத்தின் பொருளென்ன

சிப்பியில் பிறந்த முத்துக்கள் --இவள்
செவ்விதழில் சிரிப்பதென்ன
சேலத்த்தில் விளைந்த செம்மாங்கனிகள்--இவள்
கன்னத்தில் சிவப்பதென்ன
பாலைவனத்தின் பசுஞ்சோலைகள் --இவள்
சேலையில் ஆடுவதென்ன

பார்க்கும் விழிகள் இரண்டில் --இவள்
பார்வையில் சொல்வதென்ன
போராடுதே இந்த உள்ளம் --இவள்
மௌனத்தின் பொருளென்ன
கூறுவீர்களா இனிய நண்பர்களே ---இவள்
புதிரை அவிழ்க்கும் ஒருபுத்தகத்தை ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-21, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே