இவள் மௌனத்தின் பொருளென்ன
சிப்பியில் பிறந்த முத்துக்கள் --இவள்
செவ்விதழில் சிரிப்பதென்ன
சேலத்த்தில் விளைந்த செம்மாங்கனிகள்--இவள்
கன்னத்தில் சிவப்பதென்ன
பாலைவனத்தின் பசுஞ்சோலைகள் --இவள்
சேலையில் ஆடுவதென்ன
பார்க்கும் விழிகள் இரண்டில் --இவள்
பார்வையில் சொல்வதென்ன
போராடுதே இந்த உள்ளம் --இவள்
மௌனத்தின் பொருளென்ன
கூறுவீர்களா இனிய நண்பர்களே ---இவள்
புதிரை அவிழ்க்கும் ஒருபுத்தகத்தை ?