இளைப்பாறுகிறேன்

கல்லாய் காய்ந்த மரமாய்
கனிமுன் காயாய்
கவலை படிந்த நிலமாய்
களவுச் சொல்லாய்
பயன்படாது போவேனோ! என ஏங்கியிருந்தேன்.....

உன் கண்ணால்
களவுப் பார்வையால்
காதல் மொழியால்
இன்பச் சொல்லால்
இளைப்பாறுகிறேன் அன்பே!
இவ்வாழ்க்கையை.....

- வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (23-Jun-21, 8:12 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 74

மேலே