மாம்பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தின்றாற் றினவெடுக்குந் தீபனம்போம் நெஞ்செரிவாம்
அன்றே விழிநோய் அடருங்காண் - துன்றிமிக
வாதக் கரப்பானும் வன்கிரந்தி யும்பெருகுஞ்
சூதக் கனியின் சுகம்
- பதார்த்த குண சிந்தாமணி
இதையுண்டால் நமைச்சல், மார்பெரிச்சல், கண்நோய், கருங்கரப்பான், கிரந்தி இவற்றை அதிகரிக்கும்; பசி நீங்கும்