பஞ்சாப்வஞ்சியே
சிப்பியில் பிறந்த முத்துக்கள்
---உன் செவ்விதழ்களில் இடம்பிடித்ததோ
செப்பிடும் உன்னுதடுகளில் முத்துக்கள்
---புதுச்சங்கம் அமைத்து கவிதை பாடுதோ
ஒப்பிலாத் தமிழ்ச் செம்மொழியை
----உதட்டால் தேனினிமையில் உச்சரித்து
தப்பில்லாமல் தமிழ்பேசி மயக்கும்
----வடக்கிலிருந்து வந்த பஞ்சாப்வஞ்சியே !