மனிதன் மாறிவிட்டான்
*மனிதன் மாறிவிட்டான்*
கிடைக்க ஏங்கித்
தேடுகிறான்...
கிடைத்து விட்டால்
சாடுகிறான்...
கடையை அடைய
நாடுகிறான்...
அடைந்த பின்னே
ஆடுகிறான்...
மயக்கம் வந்தால்
வாடுகிறான்...
நோய் வந்தால் மட்டும்
ஏன் ஓடுகிறான்?
மனிதன் மாறிவிட்டான்...