யாக்கை நிலையாமை
உலகில் எதை எதையோ தேடி
அலையும் மனிதர் ஒன்றை மட்டும்
சிந்திப்பதும் இல்லை தேடுவதும் இல்லை
அதுவே உண்மை ஏனெனில் உண்மை
என்பது எதுவென்றால் யாக்கை நிலையாமை
அதுதான்' நீ உன்னுடல் அல்ல நீ
அதனுள் குடி இருக்கும் 'ஆன்மா;
இதை அறிந்துகொண்டால் உன்னுள் உறையும்
இறைவனை அறிந்திடலாம் உலகப்
பற்றெல்லாம் இலையுதிர்கால இலைகள்போல்
உன்னை விட்டு அகன்றிடவே