வேருக்கு எதிரி மண் நீருக்கு எதிரி கதிரவன்

எதிரி என்று எவரை நினைத்தாலும்
அவரின் கண் ஒரு பார்வை இருக்கட்டும்
இளக்காரம் வேண்டாம் அவர் பொருட்டு
ஒரு போதும் எளிய எண்ணம் கொள்ளாதீர்
செழித்து தழைக்க வேண்டும் எனில்
சிறந்த எதிரியை நமக்கு எதிராக வைத்தல் நலம்
பிறந்ததிலிருந்து நாற்பதாண்டுகள் தோற்றால்
இலக்கில்லாமலும் எதிரிகளை பார்க்காமலும்
இரவு பகலை எளிதாய் கடந்துவிட்டீர் என்றே
எண்ணிக்கொள்ளுங்கள் இதுவரையாக
முக்கினால் தான் மூத்திரமும் வருகிறது
நிலத்தை பிளக்கும் வேராலே இப்புவியில்
செழித்த மரங்கள் வாழ்கின்றன எண்ணுங்கள்
வேருக்கு எதிரி மண் நீருக்கு எதிரி கதிரவன்
இவைகள் என்றுமே ஒன்றை ஒன்று
விஞ்சிவிடவே ஒவ்வொரு நாளிலும் முயல்கின்றன.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Jun-21, 3:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே