காதலில் பிரிவு

உன்பிரிவால் வாடும் என்னெஞ்சு
என்சொல்வேன் நான் சுக்கு சுக்காய்
தகர்ந்து போனதடா வாதப் பிணிக்கெல்லாம்
சுக்கு மருந்தாம் எந்தன் சுக்காய்ப்போன நெஞ்சுக்கு
எந்த சுக்கை நாடிப்போவது நான்
இத்தனிமைக்கு ஒரு தீர்வு காண
எல்லாம் மறந்து மீண்டும் என்னோடு
சேர்ந்துவிடு என்னெஞ்சே அதுவே நம்
காதல் பிரிவை மாய்க்கும் அருமருந்து
சுகம் தரும் சுக்காம் அதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jul-21, 1:45 pm)
பார்வை : 95

மேலே