காலில் விழும்
ஆசிரியப்பா
தன்னில் இளையான் அண்ணா வாம்பார்
தயக்க மின்றிகா லில்விழு கின்றான்
தனக்குத் தெரியாத் தலைவ னைக்கேள்
என்கிறான் இன்று முளைத்த காளான்
இன்றே ஆளப் பார்க்கும் விந்தை
எங்கு நடக்கும் நந்தமிழ் நாட்டில்
இதுதான் சாமா னியரின் ஆட்சியா
இறந்தான் சொத்து நம்சொத் தாங்கேள்
கட்டுப்பா டில்லா கண்ணியம் கடமை
என்றால் ஆள்வது தானே
வேறெது எவர் விவரித் தார்சொல்லே
.........?.?