நீரோடை ஒன்று

நீரோடை ஒன்று

பேரணி
நடத்துவதற்கு

ஆலோசனை செய்ய
உட்கார்ந்து கொண்டிருந்த
கூழாங்கற்கள் கூட்டத்தில்

அனுமதி பெறாமல்
உள்ளுக்குள் நுழைந்தது
வளைந்து நெளிந்து
வேகமாய் ஓடியது
நீரோட்டம்

இதன் உள்ளீட்டை
விரும்பாத கூழாங்கற்கள்

தன்னை தொட்டு
செல்லும் போது
சல சலவென
சப்தமிட்டு எதிர்ப்பை
தெரிவித்தன.

இதுதான் சமயமென்று
மீன் கூட்டங்கள்
நீருற்றுடனே

இதன் வழ வழப்பை
தொட்டு தடவி
ஓடின.

ஓரமாய் இருந்த
பச்சை செடிகள்

வளைந்து தொட்டது
கூழாங்கற்களையா?
நீரோட்டத்தையா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-21, 11:12 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : neeroadai ondru
பார்வை : 121

மேலே