ஏய்..பெண்ணே!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஏய் பெண்ணே!

🌸நீ என்ன
நடைபெற்ற சிற்பமா ?
இல்லை
நாணம் பெற்ற
சித்திரமா?

🌺உருவம் பெற்ற
பூங்காற்றா?
இல்லை
பருவம் பெற்ற
புதுநாற்றா?

🌼மறைவற்ற
வானவில்லா?
இல்லை
மாசற்ற தமிழ்
சொல்லா?

🌻உணர்பெற்ற
வீணையா?
இல்லை
குளிர்ச்சி பெற்ற
தீபமா?

🌷அசைவு பெற்ற
கோபுரமா?
இல்லை
விலைமதிப்பற்ற
பொக்கிஷமா?

🌹ஆடைப்பெற்ற
அருவியா?
இல்லை
அணிகலன் பெற்ற சிட்டுகுருவியா?

🥀புன்முறுவல் காட்டும் சிலையா?
இல்லை
புடவை கட்டிய
மழையா?

🌷உறுதியாகச்
சொல்ல முடியவில்லை.....
உன்னை
வர்ணித்து எழுதினால்
கவிதைக்கு முடிவே
இல்லை....!

*கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Jul-21, 8:53 pm)
பார்வை : 200

மேலே