எண்ணம்போல் வாழ்கை

காமம் ஆண்களை மட்டும் சூறை ஆடவில்லை பெண்களையும் தான் சூறை ஆடியது என்பதை விளக்குவதுதான் இந்த சிறுகதை. அழகிய கிராமத்தில் மேல்நிலை கல்வி படித்த அழகான பெண் ரதி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அவளோடு கூட பிறந்தவர்கள் ஒரு தங்கை ஒரு தம்பி. மிகவும் கஷ்டமான நிலைமையிலேயே குடும்பம் நகர்ந்து சென்றது. ஏன் என்றால் அவரது தந்தை மிகவும் குறைந்த சம்பளம் வாங்கினார். கிராமம் என்பதால் வருமானத்திற்கு வேறு வலி இல்லை. அவருடைய தந்தைக்கு குடும்ப பொறுப்பு கொஞ்சம்கூட கிடையாது அவர் வாங்கும் சம்பளத்திலேயே குடிக்கவும் செய்வார். குடும்பத்தை அக்கறையோடு கொண்டுசெல்பவர் அம்மாதான். குடும்பத்தில் ரதி மட்டும் தான் பெரியவள் மற்றவர்கள் எல்லாம் நகர்ந்தது. எதிர்பாராதவிதமாக திடீர் என்று ஒருநாள் இதய நோயில் தந்தை இறந்து விட்டார்.

ரதியின் குடும்பம் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. ரதியின் தம்பி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச்சென்றார். ரதிக்கும் வயது அதிகம் ஆகிவிட்டதால் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தார் தாய் . ரதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் மாப்பிள்ளை பார்த்து விசாரிப்பது அவர்கள் அம்மாவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. நாட்கள் இப்படியே நகர்ந்துகொண்டிருந்தது திடீர் என்று ஒருநாள் திருமணம் பேசி முடிக்கப்பட்டது தேதியும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்து முடிந்தது. ரதியின் கணவர் கொத்து வேளைக்கு செல்பவர் தினக்கூலி அதனால் வருமான போதவில்லை சிரமப்பட்டார். ரதியும் கிராமம் என்பதால் வேளைக்கு போய் சம்பாரிக்க முடியவில்லை. நாளடைவில் ரதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

மேலும் குடும்ப கஷ்டம் அதிகரித்தது. ரதி கொஞ்சம் ஆடம்பர அழகு பிரியர். கணவரோ சாதாரண கிராமத்து மனிதர் ஆடம்பரம் விரும்பாதவர் சிறிது மனநலம் குன்றியவர் போல் தெரிவார். ரதியின் குடும்பம் இப்படி கஷ்டத்திலேயே நகர்ந்துகொண்டிருந்தது. வருடங்கள் கடந்தன மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ரதியால் குடும்பச்செலவு சமாளிக்க முடியவில்லை. தீடிரென்று ரதி ஒருநாள் முடிவுசெய்தார் அவருக்கு வேண்டிய நண்பர் ஒருவர் சென்னையில் உள்ளார் அவரிடம் விவரத்தை சொல்லி உதவிகேட்டர் அவரும் உடனே சென்னை புறப்பட்டு வாருங்கள் நான் எனக்கு தெரிந்த ஏற்றுமதி நிறுவனத்தி வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லியுள்ளார். ரதியும் உடனே கிராமத்தில் இருந்து சென்னை வந்துவிட்டனர் அவரது நண்பரை பார்த்து வேலையிலும் சேர்ந்துவிட்டார். ரதிக்கு ஏற்றுமதி நிறுவனத்தி உதவியாளர் பணிகொடுக்கப்பட்டது. ரதிக்கு எப்படியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் வசதியாக வாழவேண்டும் என்பது மட்டுமே கனவு. ரதி தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் கணவரை மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் பணம் அதிகம் கைக்கு வர ஆரம்பித்தவுடன் தன்கணவரை பிரிந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனித்து வாழ முடிவுசெய்தார்.

அதே போல் கணவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரதி மேலும் முன்னேற ஆசைப்பட்டார். அவள் வேலையை செய்த நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் பலர் வேலை செய்தனர். ரதிக்கோ தான் வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை அவள் மிகவும் ஆடம்பரமானவள். ஒருகட்டத்தில் அவளுக்கு தேவை பணம் அதற்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முன்வந்தார். நாளடைவில் தன்னோடு பணிபுரியும் அதிகாரிகளுடன் தன்னை பகிர்ந்துகொண்டாள் அதன் மூலம் பல வசதிகளை பெற்றார் பணமும் கிடைத்தது சுகமும் கிடைத்தது. இப்படி ருசிகண்ட ரதி மேலும் அதிக ஆசையில் விபச்சாரமே செய்ய ஆரம்பித்தாள் அதன் மூலம் அதிக பணம் சம்பாரித்தால். காலங்கள் உருண்டோடின இரண்டு பெண் பிள்ளைகளும் வயதுக்கு வந்தன. இருவரும் அருகில் உள்ள கடைகளுக்கு வேலைக்கு சென்றனர். மேலும் ரதிக்கு காம பசி அடங்க வில்லை மேலும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஒரு ஆண் துணை தேவைப்பட்டது.
அதுவும் ரதிக்கு கைகூடி வந்தது. தமிழகத்தின் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பேருந்து ஓட்டுனரை ஆசைவார்த்தைகள் கூறி வளைத்து போட்டார். ரதி வளைத்து போட்டவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கருது வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ஓட்டுநர் துணை இன்றி தவித்ததால் அவருக்கும் ஒரு பெண் துணை தேவைப்பட்டது. ரதியும் துணை இன்றி தவித்ததால் ஓட்டுனரை தனது வீட்டில் வைத்து கணவன் மனைவி போல் வாழ்ந்துவந்தால். இருவரும் தாளிக்காட்டாத கணவன் மனைவி போல் வாழ்ந்துவந்தனர். சமூகம் தூற்றியது ஆனாலும் இருவரும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ரதிக்கு தேவை பணம் வசதி ஆடம்பர வாழ்கை காமம் மற்றவைகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை. இவள் இப்படி ஊர் பொறுக்க அவளது இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்த பெண் மிகவும் நல்லவள் ஆனால் இளைய மகள் அவளை போலவே வளர்ந்துவந்தால் அணைத்து செயல்களிலும்.
ரதிக்கு நாட்கள் சந்தோசமாக நகர்ந்துகொண்டிருந்தது. மூத்தமகளுக்கு வயது அதிகமானதால் திருமணம் பேச முடிவுசெய்தால். அவள் நினைத்ததுபோல மாப்பிள்ளை அமைந்தது உடனே திருமணத்தை சிம்பிளாக ஒரு கோவிலில் வைத்து முடித்துவிட்டார். மூத்த பெண் யோக்கியமானவள் என்பதால் இன்று பிள்ளைகள் பெற்று சிறந்த முறையில் குடும்பம் நடத்திவருகிறாள். இப்பொழுது ரதியும் இளைய பெண்ணும் தான் சேர்த்து கொண்ட கணவரும் மட்டும் வசித்துவந்தனர். இளைய பெண் ஒரு பையனை காதலித்து காதல் தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சிக்கு சென்றாள். அதனை பார்த்த ரதி அவளுக்கு அறிவுரைகள் சொல்லி வெளியூர் அனுப்பி தங்கவைத்தார். நாட்கள் கடந்து சென்றன மீண்டும் இளைய பெண் சென்னை வந்தார் மீண்டும் வேலைக்கு சென்ட்ரல் அம்மாவை போலவே அனைத்து நடவடிக்கைகளும் இருந்தன. மீண்டும் ஒரு பையனை காதல் செய்தால் இந்த விஷயம் ரதிக்கு தெரிந்து பையன் வீட்டில் பேசி திருமணத் தை முடித்துவைத்தார். இளைய பெண்ணின் போக்கை பார்த்து ஊரே பேசியது அம்மாவை போலவே பிள்ளை என்று. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ரதிக்கு வயது அதிகமானதால் நிறுவனம் வேலையில் இருந்து நீக்க நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. பருவவயது முடிந்து உடல் தளர்ந்ததால் தவறான வருமானத்துக்கும் வழியின்றி போனது.

ஒருகட்டத்தில் தாலி காட்டாமல் கணவராக இருந்து ஓட்டுநர் வேலைக்கு வெளிநாடு சென்று வருகிறேன் பணம் சம்பாரித்து வருகிறேன் என்று சொல்லி போனவர் போனவர் தான் இதுவரை ஒரு தகவலும் இல்லை. ரதி பல இடங்களை விசாரித்தால் பலன் ஒன்றும் இல்லை. ஊரே தூற்றியது ரதியை. பலவருடங்களுக்கு முன்னாள் ரதி விரட்டி அடித்த முதல் கணவர் இன்று மிகுந்த செல்வாக்கோடு உள்ளார் ஆனால் இன்றுவரை மறுமணம் செய்துகொள்ளவில்லை. ரதி வேலையில் இருக்கும் பொழுது தீடீரென்று மயங்கி விழுந்தார். உடனே கம்பெனி வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரதிக்கு மருத்துவமனையில் அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. ரதிக்கு உடல் மிகவும் வீக்காக இருந்ததால் உடல் தென்புக்காக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அனைத்து சோதனை முடிவுகளும் மாலை தருவதாக மருத்துவர் சொன்னார். மருத்துவர் சொன்னது போல் ரதிக்கு வேண்டிய உறவினர்களை அழைத்தார் அவர்களிடம் மருத்துவர் ரதிக்கு என்ன என்பதை தெளிவாக விளக்கி சொன்னார்.
ரதிக்கு மார்பக புற்று நோய் முற்றிவிட்டது நாங்கள் மருந்துகள் தருகிறோம் ஆனால் முழுமையாக காப்பாற்றமுடியாது என்று சொன்னார். அதனை கேட்ட உறவினர்கள் உடனே ரதியிடம் சொல்லாமல் வீட்டிற்கு வந்த பிறகு மெதுவாக சொன்னார்கள். அவளது நிலையை பார்த்து உறவினர்களும் வருத்தப்பட்டனர். இப்படி பட்ட சூழ்நிலையில் நீ தனிமையில் என்ன செய்வாய் என்று வறுத்த பட்டனர் உறவினர்கள். ரதியின் இரண்டு பெண் பிள்ளைகளும் அருகில் இல்லை. கணவரும் கிடையாது. ரதியின் உடல்நிலையை மனதில் வைத்து நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. ரதிக்கு மேலும் நெருக்கடி எற்பட்டது. ரதிக்கு ஒருபக்கம் துணை கிடயாது ஆறுதலுக்கு மறுபக்கம் வேலையின்றி வறுமை. அதைவிட கொடுமை அவளது மரணத்தை அவள் எண்ணி கொண்டிருந்தாள்.

ரதியின் முக்கிய நண்பர்கள் அவளிடம் சொன்னார்கள் நீ விரும்பினால் நாங்கள் உன்னுடைய முதல் கணவரிடம் பேசி சுமுகமாக சேர்த்துவைக்கிறோம் என்றனர். அதற்க்கு ரதியும் ஒப்புக்கொண்டார். நாம் அவரை பலவருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததால் அவர் எப்படி மீண்டும் வருவார் என்று மனது புலம்பியது ஒரு பக்கம். ரதியின் நண்பர்கள் ஒருவழியாக முதல் கணவரிடம் அனைத்தையும் எடுத்துச்சொல்லி சுமுகமாக சேர்த்துவைத்தனர் இருவரையும். ரதியும் முதல் கணவரும் இணைந்து வாழ தொடங்கினர் அவளால் முதல் கணவரின் முடிவை பற்றி நம்ப முடியவில்லை. இந்த சமயத்தில் அவளுக்கு முதல் கணவர் கடவுளாக கா ட்சி தந்தார்.
ரதிக்கு தனது மரண நாட்கள் எண்ணப்பட்டாலும் தான் முதல் கணவரோடு வாழும் அந்த கடைசி நிமிடங்கள் மனதிருப்தியாக இருப்பதாக கூறி சந்தோஷப்பட்டாள். திமிர் பிடித்து மதிகெட்டு மயங்கி தான் கணவருக்கு செய்த துரோகங்கள் இன்று ஆண்டவனால் அவள் வாழ்க்கையே முடியும் நிலைக்கு சென்றுள்ளது. பழைய நிகழ்விகளை எல்லாம் மனதில் வஞ்சம் வைக்காமல் அனைத்தையும் மறந்து மனித நேயத்தோடு முதல் கணவர் நடந்துகொண்ட விதம் பாராட்டுக்குறியது. எப்படி இந்த உலகில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ரதியின் முதல் கணவர். எப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ரதி. ரதி தான் செய்த தவறுகளுக்கு புற்று நோயால் தனது மரண நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார். ஒவ்வொருவரின் எண்ணம் போல்தான் வாழ்க்கையில் அனைத்தும் நிகழும் என்பதற்கு இந்த சிறுகதை சிறந்த உதாரணம் அனைவருக்கும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (9-Jul-21, 7:00 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : ennampol vaazhkai
பார்வை : 174

மேலே