அப்பா

எழுத்தை படைத்தவன் இறைவன்
எழுத்தை கற்பித்தவர் தந்தை
27 வருடங்களாக என் கையை பிடித்து நடக்க வைத்தவர் என் தந்தை
ஒரு நிமிடம் கூட தனியாக நடக்க விட்டதில்லை நான் தடுமாறி கீழே விழுந்து விடுவேனோ என எண்ணி
என்னை தாங்கி நின்றவர் என் தந்தை.
உன் கையால் என் கரங்களை பிடித்து இன்னொருவர் கையில் கொடுத்தாய் அவரோடு என் வாழ்க்கையை உருவாக்கி வைத்தாய் அன்றே நான் உன் முகத்தில் கண்டேன் பேரானந்தத்தை
நான் நேர்மையை கற்றதும் உன்னிடமே
நான் பொறுமையை கண்டதும் உன்னிடமே
நான் பெருமை கொள்கிறேன் நீ என் தந்தை என்பதற்காக.

எழுதியவர் : மகேஸ்வரி (13-Jul-21, 8:02 am)
Tanglish : appa
பார்வை : 2470

மேலே