பிரியாத வரம் வேண்டும்
கவிதையில் காதல்
சொன்னதில்லை...
காதல் கடிதம்
தந்ததில்லை...
கடற்கரைக்குச்
சென்றதில்லை...
அலையதில் கால்
நனைத்ததில்லை...
திரையரங்கம்
சென்றதில்லை...
முகத்தை திரையிட்டு
மறைத்ததில்லை...
கைகோர்த்து
நடந்ததில்லை...
கதை கதையாய்
பேசி சிரித்ததில்லை...
கண்ணே
என்றதில்லை...
காதோரம்
கிசுகிசுத்ததில்லை...
இவையாவிலும் சொல்லாத
உன் காதலை
உன் நெஞ்சோடு
காண்கிறேன்...
உன்னோடு வாழாத
வாழ்வை
உன் நெஞ்சோடு
வாழும்
என் காதலுக்கு
பிரியாத வரம் கொடு...!!