காதல் வாழ்க

காதல் வாழ்க!
__________________________________ருத்ரா

ஈடன் தோட்டத்திலிருந்தே
ஆரம்பிப்போம்.
ஆதாம் ஏவாள் மனங்களில்
மின்னல் பூச்சிகள்.
எல்லாம் விளையாடிய‌
பின் அவர்கள்
எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
எப்படி?
அவள் சொன்னாள்
நாம் இரண்டு பேர் அல்லவா?
இரண்டை இரண்டால் பெருக்கு.
வரும் எண்ணை அதனாலே
பெருக்கு
என்றாள்.
பூ இதென்ன அவ்வளவு பெரிதா?
பெருக்க ஆரம்பித்தான்.
அவள் துணையாக பெருக்க‌
உதவினாள்.
எண்ணிக்கொண்டே இருந்தார்கள்
அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தது
எண்களை மட்டும் அல்ல‌
அவர்கள் கண்களையும் தான்.
அதில் கடலெனப் பொங்கும்
காதலையும் தான்.
பெருக்கிய எண்ணின் கனம்
தாங்க முடியவில்லை.
உலகமே ஆடியது.
அவர்கள் காதலின் மகிழ்ச்சிக்கோ
எல்லைகளே இல்லை.
சமமாக‌
கர்த்தர் படைத்த‌
பிரபஞ்சங்களையெல்லாம்
வைத்துப்பார்த்தாலும்
அவர்கள் தட்டு தான்
தாழ்ந்து நின்றது.
தாழ்ந்து தாழ்ந்து
இன்று வரையும் உயர்ந்தே
நிற்கிறது.

____________________________ருத்ரா

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (16-Jul-21, 7:08 am)
Tanglish : kaadhal vazhga
பார்வை : 131

மேலே