மிதக்கும் கவலை

ஒவ்வொரு மனிதனின்
மனங்களிலும்
விதவிதமான
கவலைகள் மிதந்து
கொண்டுதான் இருக்கிறது ...!!

மிதந்துகொண்டிருக்கும்
கவலைகளின் மீது
புதிய கவலைவொன்று
மனிதனின் மனதில் புகுந்து
மிதக்கும் போது..!!

சிந்தித்து கொண்டிருக்கும்
கவலைகளில் ஒன்று
மனிதனின் மனதில் இருந்து
வெளியேறிவிடுகிறது
ஆர்க்கிமிடிஸின்
"மிதத்தல் விதி"யை போல் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jul-21, 9:22 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 145

மேலே